சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுடு கூர் எரிமாலை அணிவர்; பண் - குறிஞ்சி (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lo0L1dYrDac |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.087  
சுடு கூர் எரிமாலை அணிவர்;
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருவடுகூர் (ஆண்டார்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு வடுவகிர்க்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வடுகேசுவரர் திருவடிகள் போற்றி )
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்; கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்; கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார் வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே. | [1] |
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி, ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க, கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம் ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே. | [2] |
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல் ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு பாடும் வடு கூரில் ஆடும் அடிகளே. | [3] |
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார் கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார் பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே. | [4] |
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல் தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த, அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே. | [5] |
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி, கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர் வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட ஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே. | [6] |
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும் முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்; கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே. | [7] |
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார், மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே. | [8] |
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார் அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே. | [9] |
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர் செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே. | [10] |
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன, கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை, படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே. | [11] |