சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுடு கூர் எரிமாலை அணிவர்;
பண் - குறிஞ்சி   (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lo0L1dYrDac

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.087   சுடு கூர் எரிமாலை அணிவர்;  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருவடுகூர் (ஆண்டார்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு வடுவகிர்க்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வடுகேசுவரர் திருவடிகள் போற்றி )
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

[1]
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க,
கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே.

[2]
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல்
ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு
பாடும் வடு கூரில் ஆடும் அடிகளே.

[3]
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம்
கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார்
கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

[4]
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல்
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த,
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே.

[5]
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி,
கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர்
வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட
ஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே.

[6]
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும்
முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்;
கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

[7]
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்,
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.

[8]
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார்
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே.

[9]
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய
பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர்
செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.

[10]
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன,
கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை,
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன்
அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list